காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.
Kaamam Enavondro Kannindren Nenjaththai
Yaamaththum Aalum Thozhil
The thing called lust is a heartless power It sways my mind at midnight hour
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது. அது என் நெஞ்சத்தை நள்ளிரவில் ஏவல் கொண்டு ஆள்கிறது.
SP (சாலமன் பாப்பையா)
எல்லாரும் வேலையின்றி உறங்கும் நடுச்சாமத்திலும் என் நெஞ்சத்தைத் தண்டித்து வேலை வாங்குவதால் காதல் என்று சொல்லப்படும் ஒன்று இரக்கமற்றதாக இருக்கிறது.
MK (மு.கருணாநிதி)
காதல் வேட்கை எனப்படும் ஒன்று இரக்கமே இல்லாதது; ஏனெனில் அது என் நெஞ்சில் நள்ளிரவிலும் ஆதிக்கம் செலுத்தி அலைக்கழிக்கிறது
Couplet
What men call love is the one thing of merciless power;It gives my soul no rest, e'en in the midnight hour
Explanation
Even at midnight is my mind worried by lust, and this one thing, alas! is without mercy