thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalநெஞ்சொடு கிளத்தல்Nenjotukilaththal
குறள் 1250

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா

இன்னும் இழத்தும் கவின்.

Thunnaath Thurandhaarai Nenjaththu Utaiyemaa

Innum Izhaththum Kavin

Without a thought he deserted us To think of him will make us worse

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நம்மோடு பொருந்தி இருக்காமல் கைவிட்டுச சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்.

SP (சாலமன் பாப்பையா)

நம்மைக் கலவாமல் பிரிந்து போனவரை நாம் நம் மனத்திற்குள்ளேயே கொண்டிருப்பதால் முன்பு இழந்த புற அழகை மட்டுமே அன்று இருக்கும் அக அழகையும் இழக்கப் போகிறோம்.

MK (மு.கருணாநிதி)

சேராமல் பிரிந்து சென்ற காதலரைச் சிந்தையில் வைத்திருப்பதால் மேலும் மேனியெழில் இழந்து மெலிந்து அழிய வேண்டியுள்ளது

Couplet

If I should keep in mind the man who utterly renounces me,My soul must suffer further loss of dignity

Explanation

If I retain in my heart him who has left me without befriending me, I shall lose even the (inward) beauty that remains