கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.
Kannum Kolachcheri Nenje Ivaiyennaith
Thinnum Avarkkaanal Utru
Take these eyes and meet him, O heart Or their hunger will eat me out
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.
SP (சாலமன் பாப்பையா)
நெஞ்சே! நீ அவரைக் காணச் சென்றால் என் கண்களையும் உடன் கொண்டு செல். அவற்றை விட்டுவிட்டு நீ போய் விடுவாயானால் அவரைக் காண விரும்பும் என் கண்கள் என்னைத் தின்பன போல வருந்தும்.
MK (மு.கருணாநிதி)
நெஞ்சே! நீ காதலரிடம் செல்லும் போது கண்களையும்கூட அழைத்துக்கொண்டு போ; இல்லையேல் அவரைக் காண வேண்டுமென்று என்னையே அவை தின்று விடுவது போல் இருக்கின்றன
Couplet
O rid me of these eyes, my heart; for they,Longing to see him, wear my life away
Explanation
O my soul! take my eyes also with you, (if not), these would eat me up (in their desire) to see him