காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalநெஞ்சொடு கிளத்தல்Nenjotukilaththal
குறள் 1242
காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.
Kaadhal Avarilar Aakanee Novadhu
Pedhaimai Vaazhiyen Nenju
Bless O mind! you pine in vain For me he has no love serene
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!
SP (சாலமன் பாப்பையா)
என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது அன்பு இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவர் வரவை எண்ணி வருந்துவது மூடத்தனமே.
MK (மு.கருணாநிதி)
அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க
Couplet
Since he loves not, thy smartIs folly, fare thee well my heart
Explanation
Is folly, fare thee well my heart!