thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalநினைந்தவர் புலம்பல்Ninaindhavarpulampal
குறள் 1201

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்

கள்ளினும் காமம் இனிது.

Ullinum Theeraap Perumakizh Seydhalaal

Kallinum Kaamam Inidhu

Love is sweeter than wine; for vast Is its delight at very thought

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் ) கள்ளை விட காமம் இன்பமானதாகும்.

SP (சாலமன் பாப்பையா)

முன்பு என் மனைவியுடன் கூடி அனுபவித்த இன்பத்தைப் பிரிந்திருக்கும் போது நினைத்தாலும் அது நீங்காத பெரு மகிழ்ச்சியைத் தருவதால் குடித்தால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளைக் காட்டிலும் காதல் இன்பமானது.

MK (மு.கருணாநிதி)

உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்

Couplet

From thought of her unfailing gladness springs,Sweeter than palm-rice wine the joy love brings

Explanation

Sexuality is sweeter than liquor, because when remembered, it creates a most rapturous delight