thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalதனிப்படர் மிகுதிThanippatarmikudhi
குறள் 1198

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து

வாழ்வாரின் வன்கணார் இல்.

Veezhvaarin Insol Peraaadhu Ulakaththu

Vaazhvaarin Vankanaar Il

None is so firm as she who loves Without kind words from whom she dotes

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் ( பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப் போல் வன்கண்மை உடையவர் இல்லை.

SP (சாலமன் பாப்பையா)

தம்மால் விரும்பப்படும் கணவனிடமிருந்து ஓர் இன்சொல் கூடப் பெறாமல் உயிர் வாழும் மனைவியைப் போன்ற கொடியவர் இவ்வுலகத்தில் வேறு இல்லை.

MK (மு.கருணாநிதி)

பிரிந்து சென்ற காதலரிடமிருந்து ஓர் இனிய சொல்கூட வராத நிலையில், உலகில் வாழ்கின்றவரைப் போல், கல் நெஞ்சம் உடையவர் யாரும் இருக்க முடியாது

Couplet

Who hear from lover's lips no pleasant word from day to day,Yet in the world live out their life,- no braver souls than they

Explanation

There is no one in the world so hard-hearted as those who can live without receiving (even) a kind word from their beloved