thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalதனிப்படர் மிகுதிThanippatarmikudhi
குறள் 1195

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ

தாம்காதல் கொள்ளாக் கடை.

Naamkaadhal Kontaar Namakkevan Seypavo

Thaamkaadhal Kollaak Katai

What can our lover do us now If he does not requite our love?

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்?

SP (சாலமன் பாப்பையா)

நாம் காதலித்தவர் நம்மைக் காதலிக்கவில்லை என்றால் நமக்கு எத்தகைய மகிழ்ச்சியைத் தருவார்?

MK (மு.கருணாநிதி)

நான் விரும்பிக் காதல் கொள்வது போன்று அவர் என்னை விரும்பிக் காதல் கொள்ளாத நிலையில் அவரால் எனக்கு என்ன இன்பம் கிடைக்கப் போகிறது?

Couplet

From him I love to me what gain can be,Unless, as I love him, he loveth me

Explanation

He who is beloved by me, what will he do to me, if I am not beloved by him ?