thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalதனிப்படர் மிகுதிThanippatarmikudhi
குறள் 1192

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு

வீழ்வார் அள஧ க்கும் அளி.

Vaazhvaarkku Vaanam Payandhatraal Veezhvaarkku

Veezhvaar Ala� Kkum Ali

The lover-and-beloved's self-givings Are like rains to living beings

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர் வாழ்கினறவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது.

SP (சாலமன் பாப்பையா)

அவர் இன்றி வாழ முடியாத மனைவிக்கு, அவள் இன்றி அமையாத கணவர் காட்டும் அன்பு, தன்னை நோக்கி உயிர்வாழும் உலகத்தவர்க்கு வானம் உரிய நேரம் மழை தந்தது போலாம்.

MK (மு.கருணாநிதி)

காதலர்கள் ஒருவரையொருவர் உரிய நேரத்தில் சந்தித்து அன்பு பொழிவது, வாழ்வதற்குத் தேவையான பருவமழை பொழிவது போன்றதாகும்

Couplet

As heaven on living men showers blessings from above,Is tender grace by lovers shown to those they love

Explanation

The bestowal of love by the beloved on those who love them is like the rain raining (at the proper season) on those who live by it