thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalநடுவு நிலைமைNatuvu Nilaimai
குறள் 119

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா

உட்கோட்டம் இன்மை பெறின்.

Sorkottam Illadhu Seppam Orudhalaiyaa

Utkottam Inmai Perin

Justice is upright, unbending And free from crooked word-twisting

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.

SP (சாலமன் பாப்பையா)

மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி.

MK (மு.கருணாநிதி)

நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும் அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை

Couplet

Inflexibility in word is righteousness,If men inflexibility of soul possess

Explanation

Freedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mind