thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalபசப்புறு பருவரல்Pasapparuparuvaral
குறள் 1187

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்

அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

Pullik Kitandhen Putaipeyarndhen Avvalavil

Allikkol Vatre Pasappu

From his embrace I turned a nonce This pallor swallowed me at once

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவி விட்டதே!

SP (சாலமன் பாப்பையா)

முன்னொரு சமயம் நான் அவரைத் தழுவிக் கிடந்தேன்; கொஞ்சம் விலகினேன்; அவ்வளவுதான்; இந்தப் பசலை என்னை அப்படியே அள்ளிக் கொள்வது போல் வந்துவிட்டது.

MK (மு.கருணாநிதி)

தழுவிக் கிடந்தேன்; சற்றுத் தள்ளிப் படுத்தேன்; அவ்வளவுதான்; என்னை அள்ளிக் கொண்டு விட்டதே பசலை நிறம்!

Couplet

I lay in his embrace, I turned unwittingly;Forthwith this hue, as you might grasp it, came on me

Explanation

I who was in close embrace just turned aside and the moment I did so, sallowness came on me like something to be seized on