thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalகண் விதுப்பழிதல்Kanvidhuppazhidhal
குறள் 1171

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்

தாம்காட்ட யாம்கண் டது.

Kandhaam Kaluzhva Thevankolo Thantaanoi

Thaamkaatta Yaamkan Tadhu

The eye pointed him to me; why then They weep with malady and pine?

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?

SP (சாலமன் பாப்பையா)

தணியாத காதல் துன்பத்தை நான் அறிந்ததே இந்தக் கண்கள் எனக்கு அவரைக் காட்டியதால்தானே? இப்போது அவரைக் காட்டு என என்னிடம் அழுவது எதற்கு?

MK (மு.கருணாநிதி)

கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது? அதே கண்கள் அந்தக் காதலரைக் காட்டுமாறு கேட்டு அழுவது ஏன்?

Couplet

They showed me him, and then my endless painI saw: why then should weeping eyes complain

Explanation

As this incurable malady has been caused by my eyes which showed (him) to me, why should they now weep for (him)