thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalநடுவு நிலைமைNatuvu Nilaimai
குறள் 117

கெடுவாக வையாது உலகம் நடுவாக

நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

Ketuvaaka Vaiyaadhu Ulakam Natuvaaka

Nandrikkan Thangiyaan Thaazhvu

The just reduced to poverty Is not held down by equity

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.

SP (சாலமன் பாப்பையா)

நீதி என்னும் அறவாழ்வு வாழ்ந்தும் ஒருவன் வறுமைப்பட்டுப் போவான் என்றால், அதை வறுமை என்று உயர்ந்தோர் எண்ணவேமாட்டார்.

MK (மு.கருணாநிதி)

நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது

Couplet

The man who justly lives, tenacious of the right,In low estate is never low to wise man's sight

Explanation

The great will not regard as poverty the low estate of that man who dwells in the virtue of equity