thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகளவியல்Kalaviyalபிரிவு ஆற்றாமைPirivaatraamai
குறள் 1157

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை

இறைஇறவா நின்ற வளை.

Thuraivan Thurandhamai Thootraakol Munkai

Iraiiravaa Nindra Valai

Will not my gliding bangles' cry The parting of my lord betray?

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

என் மெலிவால் முன் கையில் இறை கடந்து கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ.

SP (சாலமன் பாப்பையா)

அவர் என்னைப் பிரிய திட்டமிடுகிறார் என்பதை என் முன் கையிலிருந்து கழலும் வளையல்கள் எனக்குத் தெரிவிக்க மாட்டாவோ?

MK (மு.கருணாநிதி)

என்னை விட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ள செய்தியை என் முன்கை மூட்டிலிருந்து கழன்று விழும் வளையல் ஊரறியத் தூற்றித் தெரிவித்து விடுமே!

Couplet

The bracelet slipping from my wrist announced beforeDeparture of the Prince that rules the ocean shore

Explanation

Do not the rings that begin to slide down my fingers forebode the separation of my lord ?