துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.
Thuraivan Thurandhamai Thootraakol Munkai
Iraiiravaa Nindra Valai
Will not my gliding bangles' cry The parting of my lord betray?
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
என் மெலிவால் முன் கையில் இறை கடந்து கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ.
SP (சாலமன் பாப்பையா)
அவர் என்னைப் பிரிய திட்டமிடுகிறார் என்பதை என் முன் கையிலிருந்து கழலும் வளையல்கள் எனக்குத் தெரிவிக்க மாட்டாவோ?
MK (மு.கருணாநிதி)
என்னை விட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ள செய்தியை என் முன்கை மூட்டிலிருந்து கழன்று விழும் வளையல் ஊரறியத் தூற்றித் தெரிவித்து விடுமே!
Couplet
The bracelet slipping from my wrist announced beforeDeparture of the Prince that rules the ocean shore
Explanation
Do not the rings that begin to slide down my fingers forebode the separation of my lord ?