thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகளவியல்Kalaviyalகாதற் சிறப்புரைத்தல்Kaadharsirappuraiththal
குறள் 1127

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்

எழுதேம் கரப்பாக்கு அறிந்து.

Kannullaar Kaadha Lavaraakak Kannum

Ezhudhem Karappaakku Arindhu

My lover in my eyes abides I paint them not lest he hides

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்.

SP (சாலமன் பாப்பையா)

என் கண்ணுக்குள் அவர் இருப்பதால் கண்ணுக்கு மை தீட்டும் நேரம் அவர் மறைய நேரும் என்பதை அறிந்து மையும் தீட்டமாட்டேன்.

MK (மு.கருணாநிதி)

காதலர் கண்ணுக்குள்ளேயே இருக்கிற காரணத்தினால், மைதீட்டினால் எங்கே மறைந்துவிடப் போகிறாரோ எனப் பயந்து மை தீட்டாமல் இருக்கிறேன்

Couplet

My love doth ever in my eyes reside;I stain them not, fearing his form to hide

Explanation

As my lover abides in my eyes, I will not even paint them, for he would (then) have to conceal himself