thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகளவியல்Kalaviyalநலம் புனைந்து உரைத்தல்Nalampunaindhuraiththal
குறள் 1115

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு

நல்ல படாஅ பறை.

Anichchappook Kaalkalaiyaal Peydhaal Nukappirku

Nalla Pataaa Parai

Anicha flower with stem she wears To her breaking waist sad-drum-blares!

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினால், அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.

SP (சாலமன் பாப்பையா)

என் மனைவி தன் மென்மையை எண்ணாமல் அனிச்சம்பூவை அதன் காம்பின் அடிப்பகுதியைக் களையாமல் அப்படியே சூடிவிட்டாள். அதனால் நொந்து வருந்தும் இவள் இடுப்பிற்கு நல்ல மங்கல ஒலி இனி ஒலிக்காது.

MK (மு.கருணாநிதி)

அவளுக்காக நல்லபறை ஒலிக்கவில்லை; ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்; காரணம், அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக்கொண்டதுதான்

Couplet

The flowers of the sensitive plant as a girdle around her she placed;The stems she forgot to nip off; they 'll weigh down the delicate waist

Explanation

No merry drums will be beaten for the (tender) waist of her who has adorned herself with the anicham without having removed its stem