thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகளவியல்Kalaviyalபுணர்ச்சி மகிழ்தல்Punarchchimakizhdhal
குறள் 1110

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு.

Aridhoru Ariyaamai Kantatraal Kaamam

Seridhorum Seyizhai Maattu

As knowledge reveals past ignorance So is the belle as love gets close

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல்,நூற் பொருள்களை அறிய அறிய அறியாதமைக் கண்டாற் போன்றது.

SP (சாலமன் பாப்பையா)

நூல்களாலும் நுண் அறிவாலும் அறிய அறிய முன்னைய நம் அறியாமை தெரிவதுபோல, நல்ல அணிகளை அணிந்திருக்கும் என் மனைவியுடன் கூடக் கூட அவள் மீது உள்ள என் காதற்சுவையும் புதிது புதிதாகத் தெரிகிறது.

MK (மு.கருணாநிதி)

மாம்பழ மேனியில் அழகிய அணிகலன்கள் பூண்ட மங்கையிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் ஏற்படும் காதலானது, இதுவரை அறியாதவற்றைப் புதிதுபுதிதாக அறிவதுபோல் இருக்கிறது

Couplet

The more men learn, the more their lack of learning they detect;'Tis so when I approach the maid with gleaming jewels decked

Explanation

As (one's) ignorance is discovered the more one learns, so does repeated intercourse with a welladorned female (only create a desire for more)