அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.
Aridhoru Ariyaamai Kantatraal Kaamam
Seridhorum Seyizhai Maattu
As knowledge reveals past ignorance So is the belle as love gets close
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல்,நூற் பொருள்களை அறிய அறிய அறியாதமைக் கண்டாற் போன்றது.
SP (சாலமன் பாப்பையா)
நூல்களாலும் நுண் அறிவாலும் அறிய அறிய முன்னைய நம் அறியாமை தெரிவதுபோல, நல்ல அணிகளை அணிந்திருக்கும் என் மனைவியுடன் கூடக் கூட அவள் மீது உள்ள என் காதற்சுவையும் புதிது புதிதாகத் தெரிகிறது.
MK (மு.கருணாநிதி)
மாம்பழ மேனியில் அழகிய அணிகலன்கள் பூண்ட மங்கையிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் ஏற்படும் காதலானது, இதுவரை அறியாதவற்றைப் புதிதுபுதிதாக அறிவதுபோல் இருக்கிறது
Couplet
The more men learn, the more their lack of learning they detect;'Tis so when I approach the maid with gleaming jewels decked
Explanation
As (one's) ignorance is discovered the more one learns, so does repeated intercourse with a welladorned female (only create a desire for more)