thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகளவியல்Kalaviyalகுறிப்பறிதல்Kuripparidhal
குறள் 1093

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்

யாப்பினுள் அட்டிய நீர்.

Nokkinaal Nokki Irainjinaal Aqdhaval

Yaappinul Attiya Neer

She looked; looking bowed her head And love-plant was with water fed

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

என்னை நோக்கினாள், யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.

SP (சாலமன் பாப்பையா)

நான் பார்க்காதபோது, என்னைப் பார்த்தாள்; பார்த்து நாணத்தால் தலைகுனிந்தாள்; இந்த செயல் எங்களுக்குள் காதல் பயிர் வளர அவள் ஊற்றிய நீராகும்.

MK (மு.கருணாநிதி)

கடைக்கண்ணால் அவள் என்னைப் பார்த்த பார்வையில் நாணம் மிகுந்திருந்தது; அந்தச் செயல் அவள் என்மீது கொண்ட அன்புப் பயிருக்கு நீராக இருந்தது

Couplet

She looked, and looking drooped her head:On springing shoot of love 'its water shed

Explanation

She has looked (at men) and stooped (her head); and that (sign) waters as it were (the corn of) our love