thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகளவியல்Kalaviyalதகை அணங்குறுத்தல்Thakaiyananguruththal
குறள் 1090

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்

கண்டார் மகிழ்செய்தல் இன்று.

Untaarkan Alladhu Atunaraak Kaamampol

Kantaar Makizhseydhal Indru

To the drunk alone is wine delight Nothing delights like love at sight

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே.

SP (சாலமன் பாப்பையா)

காய்ச்சப்பட்ட கள், உண்டவர்க்கே மகிழ்ச்சி தரும்; காதலைப் போல், காண்பவருக்கும் அது மகிழ்ச்சி தருவது இல்லை.

MK (மு.கருணாநிதி)

மதுவை உண்டால்தான் மயக்கம் வரும்; ஆனால், கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்

Couplet

The palm-tree's fragrant wine, To those who taste yields joys divine;But love hath rare felicity For those that only see

Explanation

Unlike boiled honey which yields delight only when it is drunk, love gives pleasure even when looked at