காமத்துப்பால்Kaamaththuppaalகளவியல்Kalaviyalதகை அணங்குறுத்தல்Thakaiyananguruththal
குறள் 1081
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
Anangukol Aaimayil Kollo Kananguzhai
Maadharkol Maalum En Nenju
Is it an angel? A fair peacock Or jewelled belle? To my mind a shock!
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.
SP (சாலமன் பாப்பையா)
அதோ பெரிய கம்மல்அணிந்து இருப்பது தெய்வமா? நல்லமயிலா? பெண்ணா? யார் என்று அறிய முடியாமல் என் மனம் மயங்குகிறது.
MK (மு.கருணாநிதி)
எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்
Couplet
Goddess? or peafowl rare? She whose ears rich jewels wear,Is she a maid of human kind? All wildered is my mind
Explanation
Is this jewelled female a celestial, a choice peahen, or a human being ? My mind is perplexed