thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகுடியியல்KudiyiyalகயமைKayamai
குறள் 1077

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்

கூன்கையர் அல்லா தவர்க்கு.

Eerngai Vidhiraar Kayavar Kotirutaikkum

Koonkaiyar Allaa Thavarkku

The base their damp hand will not shake But for fists clenched their jaws to break

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும் படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும் உதற மாட்டார்.

SP (சாலமன் பாப்பையா)

தாடையை உடைக்கும் முறுக்கிய கை இல்லாதவர்க்குக் கயவர், தாம் உண்டு கழுவிய ஈரக் கையைக்கூட உதறமாட்டார்.

MK (மு.கருணாநிதி)

கையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக் கொடுப்பார்களேயல்லாமல், ஈகைக் குணமில்லாத கயவர்கள் ஏழை எளியோருக்காகத் தமது எச்சில் கைகைக்கூட உதற மாட்டார்கள்

Couplet

From off their moistened hands no clinging grain they shake,Unless to those with clenched fist their jaws who break

Explanation

The mean will not (even) shake off (what sticks to) their hands (soon after a meal) to any but those who would break their jaws with their clenched fists