thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகுடியியல்Kudiyiyalஇரவச்சம்Iravachcham
குறள் 1069

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள

உள்ளதூஉம் இன்றிக் கெடும்.

Iravulla Ullam Urukum Karavulla

Ulladhooum Indrik Ketum

The heart at thought of beggars melts; It dies at repulsing insults

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

இரத்தலின் கொடுமையை நினைத்தால் உள்ளம் கரைந்து உருகும், உள்ளதை ஒழிக்கும் கொடுமையை நினைத்தால் உருகுமளவும் இல்லாமல் அழியும்.

SP (சாலமன் பாப்பையா)

பிறரிடம் போய்ப் பிச்சை ஏற்று நிற்கும் கொடுமையை எண்ணினால் என் உள்ளம் உருகும். இக்கொடுமையைப் பார்த்த பிறகும் இல்லை என்று மறைப்பவர் கொடுமையை எண்ணினால் உருகும் உள்ளமும் இல்லாது அழிந்துவிடும்.

MK (மு.கருணாநிதி)

இரந்து வாழ்வோர் நிலையை நினைக்கும் போது உள்ளம் உருகுகிறது, இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை நினைத்தால் உருகிடவும் வழியின்றி உள்ளமே ஒழிந்து விடுகிறது

Couplet

The heart will melt away at thought of beggary,With thought of stern repulse 'twill perish utterly

Explanation

To think of (the evil of) begging is enough to melt one's heart; but to think of refusal is enough to break it