thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகுடியியல்Kudiyiyalஇரவச்சம்Iravachcham
குறள் 1067

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்

கரப்பார் இரவன்மின் என்று.

Irappan Irappaarai Ellaam Irappin

Karappaar Iravanmin Endru

If beg they must I beg beggers Not to beg from shrinking misers

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

இரந்து கேட்பதனால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்க வேண்டுடாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்.

SP (சாலமன் பாப்பையா)

பிச்சை எடுத்துத்தான் ஆகவேண்டும் என்றால், தம்மிடம் இருப்பதை மறைப்பாரிடம் பிச்சை எடுக்க வேண்டா என்று, பிச்சை எடுப்பவரிடம் எல்லாம் நாம் பிச்சை கேட்கின்றேன்.

MK (மு.கருணாநிதி)

கையில் உள்ளதை மறைத்து இல்லை என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்துபவர்களையெல்லாம் கையேந்திக்கேட்டு கொள்கிறேன்

Couplet

One thing I beg of beggars all, 'If beg ye may,Of those who hide their wealth, beg not, I pray.'

Explanation

I beseech all beggars and say, "If you need to beg, never beg of those who give unwillingly."