thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalசெய்ந்நன்றியறிதல்Seynnandri Aridhal
குறள் 106

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்பாயார் நட்பு.

Maravarka Maasatraar Kenmai Thuravarka

Thunpaththul Thuppaayaar Natpu

Forget not friendship of the pure Forsake not timely helpers sure

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது .

SP (சாலமன் பாப்பையா)

உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.

MK (மு.கருணாநிதி)

மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது

Couplet

Kindness of men of stainless soul remember evermoreForsake thou never friends who were thy stay in sorrow sore

Explanation

Forsake not the friendship of those who have been your staff in adversity Forget not be benevolence of the blameless