துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.
Thuppura Villaar Thuvarath Thuravaamai
Uppirkum Kaatikkum Kootru
Renounce their lives the poor must Or salt and gruel go to waste
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்க கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.
SP (சாலமன் பாப்பையா)
உண்ண, உடுத்த ஏதம் இல்லாதவர் இல்லறத்தை முழுமையாகத் துறந்து விடாதிருப்பது, பிறர் வீட்டில் இருக்கும் உப்புக்கும் கஞ்சித் தண்ணீருக்கும் எமனாம்.
MK (மு.கருணாநிதி)
ஒழுங்குமறையற்றதால் வறுமையுற்றோர், முழுமையாகத் தம்மைத் துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடு
Couplet
Unless the destitute will utterly themselves deny,They cause their neighbour's salt and vinegar to die
Explanation
The destitute poor, who do not renounce their bodies, only consume their neighbour's salt and water