thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகுடியியல்Kudiyiyalநல்குரவுNalkuravu
குறள் 1048

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்

கொன்றது போலும் நிரப்பு.

Indrum Varuvadhu Kollo Nerunalum

Kondradhu Polum Nirappu

The killing Want of yesterday Will it pester me even to-day?

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).

SP (சாலமன் பாப்பையா)

நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?

MK (மு.கருணாநிதி)

கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்

Couplet

And will it come today as yesterday,The grief of want that eats my soul away

Explanation

Is the poverty that almost killed me yesterday, to meet me today too ?