thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகுடியியல்Kudiyiyalநல்குரவுNalkuravu
குறள் 1042

இன்மை எனவொரு பாவி மறுமையும்

இம்மையும் இன்றி வரும்.

Inmai Enavoru Paavi Marumaiyum

Immaiyum Indri Varum

The sinner Want is enemy dire Of joys of earth and heaven there

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.

SP (சாலமன் பாப்பையா)

இல்லாமை என்ற ஒரு பாவி ஒருவனிடத்தில் சேர்ந்தால், அவன் பிறர்க்குக் கொடுக்க இல்லாதவன் ஆவதால் அவனுக்கு மறுமை இன்பமும் இல்லை; தானே அனுபவிக்க ஏதும் இல்லாததால் இம்மை இன்பமும் இல்லை.

MK (மு.கருணாநிதி)

பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது

Couplet

Malefactor matchless! poverty destroysThis world's and the next world's joys

Explanation

When cruel poverty comes on, it deprives one of both the present and future (bliss)