இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.
Inmai Enavoru Paavi Marumaiyum
Immaiyum Indri Varum
The sinner Want is enemy dire Of joys of earth and heaven there
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.
SP (சாலமன் பாப்பையா)
இல்லாமை என்ற ஒரு பாவி ஒருவனிடத்தில் சேர்ந்தால், அவன் பிறர்க்குக் கொடுக்க இல்லாதவன் ஆவதால் அவனுக்கு மறுமை இன்பமும் இல்லை; தானே அனுபவிக்க ஏதும் இல்லாததால் இம்மை இன்பமும் இல்லை.
MK (மு.கருணாநிதி)
பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது
Couplet
Malefactor matchless! poverty destroysThis world's and the next world's joys
Explanation
When cruel poverty comes on, it deprives one of both the present and future (bliss)