thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalசெய்ந்நன்றியறிதல்Seynnandri Aridhal
குறள் 104

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார்.

Thinaiththunai Nandri Seyinum Panaiththunaiyaak

Kolvar Payandheri Vaar

Help given though millet-small Knowers count its good palm-tree tall

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.

SP (சாலமன் பாப்பையா)

தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்

MK (மு.கருணாநிதி)

ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்

Couplet

Each benefit to those of actions' fruit who rightly deem,Though small as millet-seed, as palm-tree vast will seem

Explanation

Though the benefit conferred be as small as a millet seed, those who know its advantage will consider it as large as a palmyra fruit