thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகுடியியல்Kudiyiyalகுடிசெயல் வகைKutiseyalvakai
குறள் 1029

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்

குற்ற மறைப்பான் உடம்பு.

Itumpaikke Kolkalam Kollo Kutumpaththaik

Kutra Maraippaan Utampu

Is not his frame a vase for woes Who from mishaps shields his house?

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தன் குடிக்கு வரக்குடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ.

SP (சாலமன் பாப்பையா)

தன்னால், விலங்குளால், பருவ மாற்றங்களால் துன்பப்படும் வீட்டையும், நாட்டையும் அத்துன்பங்களில் இருந்து காக்க முயல்பவனின் உடம்பு, துன்பத்திற்கு மட்டுமே கொள்கலமோ? இன்பத்திற்கும் இல்லையோ?

MK (மு.கருணாநிதி)

தன்னைச் சார்ந்துள்ள குடிகளுக்குத் துன்பம் வராமல் தடுத்துத் தொடர்ந்து அக்குடிகளைக் காப்பாற்ற முயலுகிற ஒருவன், துன்பத்தைத் தாங்கி கொள்ளவே பிறந்தவனாகப் போற்றப்படுவான்

Couplet

Is not his body vase that various sorrows fill,Who would his household screen from every ill

Explanation

Is it only to suffering that his body is exposed who undertakes to preserve his family from evil ?