thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகுடியியல்KudiyiyalநாணுடைமைNaanutaimai
குறள் 1019

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்

நாணின்மை நின்றக் கடை.

Kulanjutum Kolkai Pizhaippin Nalanjutum

Naaninmai Nindrak Katai

Lapse in manners injures the race Want of shame harms every good grace

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

ஒருவன் கொள்கை தவறினால் , அத் தவறு அவனுடையக் குடிப் பிறப்பைத் கெடுக்கும், நாணில்லாத தன்மை நிலைப் பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.

SP (சாலமன் பாப்பையா)

ஒருவன் ஒழுக்கம் கெட்டால் அவன் குடும்பப் பிறப்பு கெடும்; அவனே நாணம் இல்லாது நின்றால் அவன் நலம் எல்லாம் கெடும்.

MK (மு.கருணாநிதி)

கொண்ட கொள்கையில் தவறினால் குலத்துக்கு இழுக்கு நேரும் அதற்கு நாணாமல் பிறர் பழிக்கும் செயல் புரிந்தால் நலமனைத்தும் கெடும்

Couplet

'Twill race consume if right observance fail;'Twill every good consume if shamelessness prevail

Explanation

Want of manners injures one's family; but want of modesty injures one's character