thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகுடியியல்KudiyiyalநாணுடைமைNaanutaimai
குறள் 1012

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல

நாணுடைமை மாந்தர் சிறப்பு.

Oonutai Echcham Uyirkkellaam Veralla

Naanutaimai Maandhar Sirappu

Food, dress and such are one for all Modesty marks the higher soul

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும், எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.

SP (சாலமன் பாப்பையா)

உணவு, உடை இன்னும் பிற சிறப்புகள், எல்லா மனிதர்க்கும் ஒன்றே; நல்ல மனிதர்க்குச் சிறப்பாவது நாண் உடைமையே.

MK (மு.கருணாநிதி)

உணவு, உடை போன்ற அனைத்தும் எல்லோருக்கும் பொதுவான தேவைகளாக அமைகின்றன; ஆனால் சிறப்புக்குரிய தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும் செயல்களைத் தவிர்த்து வாழும் நாணுடைமைதான்

Couplet

Food, clothing, and other things alike all beings own;By sense of shame the excellence of men is known

Explanation

Food, clothing and the like are common to all men but modesty is peculiar to the good