thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalசெய்ந்நன்றியறிதல்Seynnandri Aridhal
குறள் 101

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது.

Seyyaamal Seydha Udhavikku Vaiyakamum

Vaanakamum Aatral Aridhu

Unhelped in turn good help given Exceeds in worth earth and heaven

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

SP (சாலமன் பாப்பையா)

ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது

MK (மு.கருணாநிதி)

``வாராது வந்த மாமணி'' என்பதுபோல், ``செய்யாமற் செய்த உதவி'' என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா

Couplet

Assistance given by those who ne'er received our aid,Is debt by gift of heaven and earth but poorly paid

Explanation

(The gift of) heaven and earth is not an equivalent for a benefit which is conferred where none had been received