thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகுடியியல்Kudiyiyalநன்றியில் செல்வம்Nandriyilselvam
குறள் 1004

எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்

நச்சப் படாஅ தவன்.

Echchamendru Enennung Kollo Oruvaraal

Nachchap Pataaa Thavan

What legacy can he leave behind Who is for approach too unkind

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.

SP (சாலமன் பாப்பையா)

பிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்திற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்?

MK (மு.கருணாநிதி)

யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்?

Couplet

Whom no one loves, when he shall pass away,What doth he look to leave behind, I pray

Explanation

What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?